ஒரு பக்கம் தலித் வகையறா என்கிற கருத்துத் திணிப்பும் இன்னொரு பக்கம் என் எழுத்து தலித் எழுத்தல்ல என்கிற அடையாள மறுப்பும் நிகழும் சூழலில் சாதியைப் பேசித்தான் ஆக வேண்டும் என்கிற சூரஜ் யங்டே இந்திய நிலப்பரப்பில் மட்டுமல்லாது சர்வதேசக் குரலாக ஒலிக்கும் வலிமையான குரல். தமிழில் இருக்கும் தீவிர தலித் முற்போக்கு எழுத்தாளர்களில் சிலர் பிற்போக்கின் அடிவருடியாக மாறி சலாம் போட்டுக்கொண்டிருக்கும் சூழலில் சூரஜை வாசிக்க ஆரம்பித்துள்ளேன். அரசியல் கூர்மையுடனான இவரின் உரையாடல்களை யூடியூப் சேனலில் கண்டு மெய்சிலிர்த்திருக்கிறேன். இப்படியான வலிய குரல்; கூரிய பார்வை, நெஞ்சுறுதி சமகால இளைஞர்களிடம் என்னளவில் கண்டதில்லை. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் முதல் தலித் அறிஞரான சூரஜ்ஜை வாசிப்பதில் பெருமை கொள்கிறேன். இந்த நூலினை வாங்கி வந்து கொடுத்த அன்புத் தம்பி ரவிக்கு நன்றி என்கிற ஒற்றைச் சொல் மட்டுமல்ல ; ஓராயிரம் முத்தங்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...

-
என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...
-
பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...
-
Pinterest நேற்று மாலை அலுவலகம் முடிந்ததும் நண்பர் செந்தில்குமாரைச் சந்திக்கச் சென்றேன். இவர் திருவல்லிக்கேணியில் உள்ள பைகிராஃப்ட் சாலை நடைமே...
No comments:
Post a Comment