Tuesday, February 15, 2022

நரையைப் பகிர்கிறேன்


சமீபத்தில் ஓர் இலக்கிய நிகழ்வில் கலந்திருந்தேன். அங்கு எடுத்த போட்டோ ஒன்றை நண்பர் முகிலன் அனுப்பியிருந்தார். மிகுந்த ஆர்வத்துடன் பதிவிறக்கம் செய்து பார்த்தேன். திடுக்கிடலுடன் ஏமாற்றமே எஞ்சியது. இதற்கு முன் எடுத்த நிழற்படங்களைவிட இதில் நரை கூடியிருந்தது. சற்று சுருங்கி வறண்ட தோல் வயோதிகத்தன்மையைக் காட்டியது போல் இருந்தது. ஒருவகையில் கொஞ்சம் ஸ்டைலாகவும் இருந்தது. சிறுவயதில் வாயைத் திறந்தமேனிக்கு இருக்கும் போதெல்லாம் ``டே திறந்த வாயா'' என்று சிவகாமி டீச்சர் கிண்டல் செய்வார். அவ்வாறான தன்மையுடன் இல்லையென்றாலும் துருத்துவதற்கும் உள் மடித்தலுக்கும் இடையே பற்களுக்குள் சிக்கியிருந்தது நாக்கு. கணத்தில் திறந்திருக்கிறதா அல்லது மூடியிருக்கிறதா என யோசித்தேன், திறந்துதான் கிடந்தது வாய்.  என்னைக் கண்காணிக்கும் என்னைச் சுற்றிமுற்றிப் பார்த்துவிட்டு வாயை மூடிக்கொண்டேன். பின்பு, போட்டோ ஷாப்பில் Hue / Saturation ஐ சொடுக்கி நிழற்படத்தின் தன்மையை மாற்ற முயற்சி செய்தேன். கொஞ்சம் பலன் கிட்டியது. முடித்திருத்தம் செய்து பரட்டைத்தலையைச் சரிசெய்ய வேண்டுமென அப்போது நினைத்துக்கொண்டேன். நரையும் சுருக்கமும் மறையாமல் இருக்கும் அந்நிழற்படத்தை இப்போதைக்குப் பகிர்கிறேன்.



பச்சோந்தி
16.02.2022

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...