Wednesday, May 5, 2021

விட்டுவிடலாம்

 



வயிற்றில் வனத்தைச் சுமந்து வந்தேன்

அப்படியே விட்டுவிடு என்றாய்

காலில் கடலைச் சுமந்துவந்தேன்

அப்படியே விட்டுவிடு என்றாய்

விரலில் வாசத்தைச்  சுமந்துவந்தேன்

அப்படியே விட்டுவிடு என்றாய்  

இதழ்களில் சிரிப்பைச் சுமந்துவந்தேன்

அப்படியே விட்டுவிடு என்றாய்  

இமைகளில் கண்ணீரைச் சுமந்துவந்தேன்

அப்படியே விட்டுவிடு என்றாய்  

கண்ணில் கனவைச் சுமந்துவந்தேன்

அப்படியே விட்டுவிடு என்றாய்  

நெஞ்சில் உன்னைச் சுமந்துவந்தேன்

அப்படியே விட்டுவிடு என்றாய்   

நீ வேண்டுமானால் 

எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிடு

என்னால் 

எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிடமுடியாது   

என்னை வேண்டுமானால் விட்டுவிட்டுப் போகட்டும் 

எல்லாம் 


- பச்சோந்தி

05.05.2021


No comments:

Post a Comment

  பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை   `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...