சிறுதானியங்களும் குறுங்கனிகளும்
சேமித்துக் காத்திருக்கிறேன்
எப்போது வருவாய் எம்
பறவையே
நீ
உண்டு
எஞ்சியவற்றை நான்
உண்ணவே
பசியோடு காத்திருக்கிறேன்
எப்போது வருவாய் எம்
பறவையே
கத்திரி வெய்யிலில்
நிலமும் காற்றும் வானும்
கடுமையாய்ச் சுடுகின்றன
பெரும்
கல்தொட்டியில் நீர்
சேமித்துள்ளேன்
சற்றேனும் வந்து சிறகுலர்த்தியாவது செல்வாயா
சதா
பறந்துகொண்டே இருந்தால்
சிறகுகள் வலிக்காதா
மூங்கில் கழிகளை
இறுக்கி சிறுகுடில் கட்டியுள்ளேன்
கண்ணிமைப் பொழுதுகள் ஓய்வெடுத்துச் செல்லக்கூடாதா
உன்
கால்கள்
என்
உச்சந்தலைமீது அழுந்தியுள்ளது
உன்
உடல்
காற்றில் மிதக்கிறது
உன்
தலையை
மட்டும்
எங்கு
சுமந்து அலைகிறாய்
யார்
யாரோ
உன்னை
எங்கெங்கோ பார்த்ததாய்ச் சொல்கிறார்கள்
ஒரு
நொடி
ஒரு
பொழுது
உன்
கருவிழிகள் என்னைப் பார்க்காதா
நினைவில் சேமித்த
உன்
முழு
உருவப்
படத்தைப் பார்த்தேங்கும்
என்
ஏக்கத்திற்கு
ஒரு
முற்றுப்புள்ளி வைக்கக்கூடாதா
நீயும்கூட
என்னை நினைத்து ஏங்கி இருப்பாய் அல்லவா
- பச்சோந்தி
அருமை தோழர்...
ReplyDeleteநன்றி தோழர்
Delete