Saturday, May 1, 2021

எண்ணையும் என்னையும்

 



இரண்டு நிமிடத்தில் அழைக்கிறேன் என்றாய்
இருநூறு நிமிடங்கள் ஆகிவிட்டன
இருநூறில்
எத்தனை இரண்டு இருக்கும் என
எண்ண ஆரம்பித்துவிட்டேன்
எண்ணுவதற்குள்  நானூறாகிவிட்டன
இப்போது
நானூறில் எத்தனை இரண்டு என 
எண்ண ஆரம்பித்துவிட்டேன்
இப்படி எண்ணிக்கொண்டே இருக்கிறேன்
நீயும்கூட என்னை எண்ணிக்கொண்டுதான் இருப்பாய்
எண்ணை எண்ணுவதும்
என்னை எண்ணுவதும்
எண்ணியெண்ணியே வாழ்ந்து தீர்ப்பதும் 

- பச்சோந்தி

02.05.2021


No comments:

Post a Comment

  பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை   `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...