Saturday, May 1, 2021

எண்ணையும் என்னையும்

 



இரண்டு நிமிடத்தில் அழைக்கிறேன் என்றாய்
இருநூறு நிமிடங்கள் ஆகிவிட்டன
இருநூறில்
எத்தனை இரண்டு இருக்கும் என
எண்ண ஆரம்பித்துவிட்டேன்
எண்ணுவதற்குள்  நானூறாகிவிட்டன
இப்போது
நானூறில் எத்தனை இரண்டு என 
எண்ண ஆரம்பித்துவிட்டேன்
இப்படி எண்ணிக்கொண்டே இருக்கிறேன்
நீயும்கூட என்னை எண்ணிக்கொண்டுதான் இருப்பாய்
எண்ணை எண்ணுவதும்
என்னை எண்ணுவதும்
எண்ணியெண்ணியே வாழ்ந்து தீர்ப்பதும் 

- பச்சோந்தி

02.05.2021


No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...