Tuesday, April 27, 2021

எங்கும் வியாபித்திரு மகளே





உன் நெஞ்சில் என்னைக் கட்டிவைத்தாய் 
ஒரு நிமிடக் கண்ணயர்வில்
முதுக்குபுறமாய்த் துளையிட்டுத் தப்பிவிட்டேன் மகளே

உன் நாநுனியில் என்னைச் சுற்றிவைத்தாய்
ஓட்டைப்பல்லின் வழியே
எகிறிக்குதித்தேன் மகளே

உன் கொலுசில் என்னைத் திருகி வைத்தாய்
அடர்ந்த கூட்ட நெரிசலில்
தொலைந்துகொண்டேன்  மகளே

உன் கண்களுக்குள் என்னைக் கட்டிவைத்தாய்
கண்ணீரின் கரிப்போடு 
சொட்டிவிட்டேன் மகளே

உன் முத்தத்தில் என்னை முடிந்துவைத்தாய்
உதட்டுப் பள்ளத்தில் பதுங்கி
உலர்ந்துவிட்டேன் மகளே 

ஒன்றே ஒன்றைப் புரிந்துகொண்டால் போதும் மகளே

எங்கும் சிக்குவது 
ஓரிடத்திலும் தழைக்காது
எங்கும் சிக்காதது 
எங்கும் வியாபித்திருக்கும்   

- பச்சோந்தி



 


No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...