Tuesday, April 27, 2021

உன்னைப் போல் உறங்காது எரிகிறேன் நிலவே!

 




மகனைக் கட்டியணைத்து உறங்கும் மனைவியும் 
என்னைக் கட்டியணைத்து உறங்கும் மகளும்
ரயிலேறிச் சென்றுவிட்டனர்
உன்னைப் போல் உறங்காது எரிகிறேன் நிலவே  

கட்டாந்தரையையும்
தலையணையையும் 
எத்தனை முறைதான் கட்டியணைத்து உறங்குவது

சுவர்களைக் கட்டியணைக்கிறேன் 
சதை எலும்புகளில் சுவையில்லை 

காற்றைக் கட்டியணைக்கிறேன் 
கொஞ்சமும் வெப்பமில்லை

ஒளியைக் கட்டியணைக்கிறேன் 
உதட்டில் ஈரமில்லை 

வானைக் கட்டியணைக்கிறேன்
கையில் சிக்கவில்லை

என்னில் எரியும் நெருப்பை அணைத்தபடியே
உன்னைப் போல் உறங்காது எரிகிறேன் நிலவே  


- பச்சோந்தி 


No comments:

Post a Comment

  பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை   `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...