Monday, April 26, 2021

எரிகிற நெருப்பில் நீண்டநேரம் குளிர்காயமுடியாது

 



எரிகிற வீட்டை இறுகப் பற்றாதே
எரித்தவனைப் பிடி
பாதிக் கருகின உன் காந்தி நோட்டுகள்
கிழித்து எரியப்பட்டன உன் பட்டயச் சான்றிதழ்கள்
உடைத்து நொறுக்கப்பட்டன உன் வாகனங்கள்
இவை எல்லாவற்றையும் செய்தவனுக்கு
ஒரு லாபமும் இல்லை
எரிகிற நெருப்பில் நீண்டநேரம் குளிர்காயமுடியாது
அதன் சாம்பலில் பலமுறை பல்துலக்க முடியாது
ஒன்று செய்
நீயே கரிக்கட்டைகளைக் கொடுத்தனுப்பு
கரும்பலகைப் புதுப்பிக்கப்பட்டால்
எல்லாம் சரியாகிவிடும்

- பச்சோந்தி

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...