Tuesday, March 30, 2021

எங்கள் பயணத்தைத் தொடர்கிறோம்




2012 - 2018 வரை சேர்ந்து வாழ்ந்த காலம் ஓராண்டு இருக்கும். கண், கால் போனபோக்கிலும் அலைந்து திரிந்தபின், சென்னையில் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கையை, நம்பிக்கையை மீண்டும் கொடுத்துள்ளது காலம். எத்தனை நாள் 'அழகான மனைவி அன்பான துணைவி பாடல் வரிகளையும், வானம் பார்த்தேன், மாய நதியையும் கேட்டுக் கடந்துள்ளேன் என்பதை நினைக்கையில் எனக்கே ஆச்சர்யமாக உள்ளது. 

அவள் பிணியில் சிக்கி மீண்டும் உயிருடன் கிடைத்ததே பெரும்பேறுதான். 'மாமா கடைசி வரை என்னைக் கூப்பிட்டுப் போகமாட்டாருபோல' என்கிற வார்த்தைகளை, அக்கா சொல்லக் கேட்டதிலிருந்து மீண்டும் மீண்டும் துன்புறுத்தின. 10க்கு 15 அடியுள்ள ஒற்றை அறையுள்ள வீட்டைப் பிடித்து மனைவி மக்களை அழைத்துவந்துவிட்டேன். அவர்கள் வந்து இருக்கும் மூன்று வாரங்களும் அன்பின் சிறையில் அடைபட்டுள்ளேன். 

அந்தச் சிறை என்னை ஒடுக்குகிறது... இடைவிடாது நெருக்குகிறது... ஆனாலும் என்னைப் புதுப்பிக்கிறது... முதன்முறை கடல்பார்க்கும் மகனோடும் மகளோடும் நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்கிறோம் புதுமணத் தம்பதியென...

No comments:

Post a Comment

  பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலை   `கபால நகரம்’ பச்சோந்தியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பென்று நினைக்கிறேன். அவருடைய முதல் தொகுப்பு, ‘வே...