அவள் பிணியில் சிக்கி மீண்டும் உயிருடன் கிடைத்ததே பெரும்பேறுதான். 'மாமா கடைசி வரை என்னைக் கூப்பிட்டுப் போகமாட்டாருபோல' என்கிற வார்த்தைகளை, அக்கா சொல்லக் கேட்டதிலிருந்து மீண்டும் மீண்டும் துன்புறுத்தின. 10க்கு 15 அடியுள்ள ஒற்றை அறையுள்ள வீட்டைப் பிடித்து மனைவி மக்களை அழைத்துவந்துவிட்டேன். அவர்கள் வந்து இருக்கும் மூன்று வாரங்களும் அன்பின் சிறையில் அடைபட்டுள்ளேன்.
அந்தச் சிறை என்னை ஒடுக்குகிறது... இடைவிடாது நெருக்குகிறது... ஆனாலும் என்னைப் புதுப்பிக்கிறது... முதன்முறை கடல்பார்க்கும் மகனோடும் மகளோடும் நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்கிறோம் புதுமணத் தம்பதியென...
No comments:
Post a Comment