Thursday, September 1, 2022

உப்பலையில் கரையும் மாநகரம்

 

pinterest


கக்கத்தில் ஒன்றும் கையில் மற்றொன்றுமாய்

விளக்குமாற்றைச் சுமந்து 

தேங்கிய மழைநீரில் தலைகீழாய் நகர்பவள் 

முகக் கவசத்தைக் கழற்றி எச்சில் பெய்கிறாள் 

மழைநீரின் கொள்ளளவு உயர்கிறது

மினுங்கும் நாவற்பழங்களுக்குப் 

பாடப் புத்தகங்களைக் கிழிப்பவள்

சடுதியில் கொலுசுமணிகளைத் திருகுகிறாள்

கடுகுநிற மணிக்கட்டுகள் 

கழன்று கழன்று விழுந்து வானை முட்டி

மழைத்தாரைகள் சிந்திய நடைமேடையில் உருண்டோடுகின்றன 

உடைந்து நெளிந்த பூக்கடைப் பேருந்து நிழற்குடையின் கீழ்

இளஞ்சிவப்பு சேலை உடுத்திய மூதாட்டி

ஒற்றைக் கண்ணில் நீர்வடிக்கிறாள்

நைந்த வெண்மேகக்கோணியில் 

குவிந்த பலாக்கொட்டைகளின் மீது

ஈக்கள் ரீங்கரிக்கின்றன  

பெயர்ப் பலகையில் அமர்ந்த பறவை

ரீங்காரத்தில் எச்சமிடுகிறது

மற்றைக் கண்ணில் ஒழுகும் நீரில்

மெல்ல கரைகிறது இம்மாநகரம்

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...