Saturday, May 1, 2021

இருத்தலி

 



நல்லவேளை நீ வந்துவிட்டாய் என்றாய்
நான் எங்கே வந்தேன்
நீதானே என்னை இழுத்துவந்தாய்
நல்லவேளை நான் சென்றுவிட்டேன் என்கிறாய்
நீ எங்கே சென்றாய்
நான்தானே உன்னை அனுப்பிவைத்தேன்
இப்போது
நானும் இங்கு இல்லை
நீயும் அங்கு இல்லை  
எங்கே இருக்கிறோம்
எங்கே இருக்கிறோம்  
எங்கே இருக்கிறோம்  

- பச்சோந்தி

No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...