Thursday, April 29, 2021

தெளிவி

 


கிணற்று நீரில் விஷம் கலப்பவன்
ஒரு குவளை தண்ணீர்கூட தரமாட்டன்
பயிர்களைத் தீயிட்டுக் கொளுத்துபவன்
ஒரு கவளம் உணவுகூட தரமாட்டான்  
பாதங்களைக் கழற்றி தலையில் சூடச் சொல்பவன் 
பழுதான சாலைகளைச் செப்பனிடக்கூட மாட்டான்
காதலித்தவர்களைக் கழுத்தறுப்பவன்
பின்னிப்பிணைந்த சிறு செடியையும் விட்டுவைக்கமாட்டான் 
மனநலம் பிசகிய இவர்களையெல்லாம் அழையுங்கள்
கருவறையின் எடையைக் காட்டுங்கள் 
வயிற்றைத் திறந்து காட்டுங்கள்
மரணக்குழியின் ஆழ அகலங்களை இறங்கிக் காட்டுங்கள்
குழி தானாக மூடுவதற்குள்
கவனமாக மேலே அழைத்து வந்துவிடுங்கள்
கல்லெறிந்த நீர் எப்போதும் கலங்கியே இருக்காது
உடைந்த குடம் நீரை முழுவதும் கொட்டாது

- பச்சோந்தி
   29.04.2021


No comments:

Post a Comment

என் வாழ்வை பீ.மு - பீ.பி என்று வரையறை செய்யலாம் என்று தோன்றுகிறது. அதென்ன பீ.மு - பீ.பி என்று கேட்கிறீர்களா? பீஃப் கவிதைகளுக்கு முன் - பீஃப்...